ஏப்ரலில் எரிபொருள் மின்சார விலைகள் குறைக்கப்படும் – எரிசக்தி அமைச்சு..!

அடுத்த மாதம் (ஏப்ரல்) எரிபொருள் விலையில் இருந்து மக்கள் நிம்மதி அடைவார்கள் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் மாதம் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

“கச்சா எண்ணெய் விலை குறைகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் வலுவடைகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு அதிபர் ஏற்கனவே எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அந்த சலுகைகளை நாங்கள் வழங்குகிறோம்.” என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button