விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்.

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் | Money Deposited In Farmers Bank Accounts

உரத்தை கொள்வனவு செய்வதற்காக பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 2 பில்லியன் ரூபா நிதி இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை 9 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு 15,000 ரூபா விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button