புதிய வகை கிருமிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய வகை கிருமிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | A New Type Of Infectious Disease Spread

புதிய வகையை சேர்ந்த கிருமி தொற்றினால் நெற்செய்கை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 வகையான புதிய கிருமி தொற்றினால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குறித்த கிருமி தொற்று காரணமாக 20,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்பயிர்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள நெற் பயிர்களே இந்த கிருமிகளால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கிருமி தொற்று குறித்து விவசாயிகள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button