300 பயணிகளுடன் இன்றுகாலை தரையிறங்கவுள்ள சிறி லங்கன் எயார் லைன்ஸ்

300 பயணிகளுடன் இன்றுகாலை தரையிறங்கவுள்ள சிறி லங்கன் எயார் லைன்ஸ் | Sri Lankan Air Lines To Land This Morning

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தொழில்நுட்பக் கோளாறிற்கு உள்ளான சிறி லங்கன் எயார் லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக சிறி லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு சென்ற சிறி லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 06 பொறியியலாளர்கள் இந்த விமானத்தை சீர்செய்துதுள்ளதாகவும் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.

இதன்படி, 04/17 நள்ளிரவு 12.30 மணிக்கு இலங்கைக்கு வரவிருந்த சுமார் 300 இலங்கை பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறி லங்கன் ஏர்லைன்ஸின் UL-605 என்ற விமானம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்படும்.

விமானம் 04/17 காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button