எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம்

எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம் | Resolution To Reduce Fuel Prices Kanchana

இலங்கையில் எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எரிசக்தி அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அடுத்த நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை விலை சூத்திரம் தொடர்பில் பங்குதாரர்களை அழைத்து எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button