எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!

உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை(fuel price)குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதத்தில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வரி குறைப்பு ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button