சுகாதார பணியாளர்களுக்கான மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டது!

சுகாதார பணியாளர்களுக்கான மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை 15 சதவீதத்தால் குறைத்து சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக, சம்பளத்தை நம்பியுள்ள அவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொள்வதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீர்மானத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பால் சுகாதார சேவை பணியாளர்கள் பாரிய அசெளகரியங்களை எதிர்கொள்வதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளத் தலைவர் சமந்த கோரளேராச்சி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button