இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு – வெளியாகிய மகிழ்ச்சித் தகவல்!

இவ்வாண்டு இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேலின் விசேட பிரதிநிதிகள் குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சந்தித்தபோது, இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2, 000 இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலுக்கான தாதியர் தொழில் வாய்ப்பை வழங்குவதற்காக, இடைத்தரகர்கள் பணம் கோரினால், அது தொடர்பிலான தகவல்களை தமக்கு தருமாறு அந்நாட்டின் குடித்தொகை மற்றும் புலம்பெயர்வுக்கான திணைக்கள பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button