இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு!

மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது முக்கியமான அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் படி, “2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பணவீக்கம் மாறாமல் தொடர்ந்து -5.2 சவீதமாக காணப்படுகிறது.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button