உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவித்தல் | 2023 Sri Lankan Local Elections Local Gov Election

ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரத்துச் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம், தேர்தலை நடத்துவது தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோரப்பட்ட நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைத்தால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும்.

அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவேண்டுமானால், ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக செயற்படும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button