இலங்கை அணிக்கு புதிய தலைவர் : பரிந்துரைக்கும் முன்னாள் பிரபல வீரர்

இலங்கை அணிக்கு புதிய தலைவர் : பரிந்துரைக்கும் முன்னாள் பிரபல வீரர் | Aravinda Named New Captain Sri Lankan Team

எதிர்வரும் ரி 20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு தலைவராக சரித் அசங்காவை நியமிக்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைசிறந்த துடுப்பாட்டவீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அசங்க பொறுப்புடன் துடுப்பெடுத்தாடுவதாக தோன்றுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இது, தான் விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் இருந்து பார்க்கும் சூழ்நிலை என்றும் மற்றபடி வீரர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் தலைமைத்துவ திறன்களை தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கும் திட்டம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அரவிந்தத டி சில்வா இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button