கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம்!

இலங்கையின் கடவுச்சீட்டுகளை டிஜிட்டல் மையப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையுமென குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் கடவுச் சீட்டுக்கு மதிப்பேற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், பல்வேறு காரணங்களுக்காக அந்த பணிகள் தாமதித்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்குவதற்கான கேள்வி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும், 8 மாதங்களுள் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button