மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: நடைமுறைப்படுத்தவுள்ள விசேட கடன் திட்டங்கள்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: நடைமுறைப்படுத்தவுள்ள விசேட கடன் திட்டங்கள் | Govt Resolves To Implement Special Credit Schemes

நாட்டில் எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சாந்த வீரசிங்க (Shantha Weerasinghe) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்படவுள்ளது.

இதேவேளை வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button