தமிழ் மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்த ஜனாதிபதி

தமிழ் மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்த ஜனாதிபதி | Emergency Telephone Number For Tamils

தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இலக்கத்தின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் மொழியில் பொலிஸ் உதவிகளைப் பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button