புதிய அடையாள அட்டை அறிமுகம்! நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இலங்கையில் உள்ள விசேட தேவையுடையவர்கள் எந்த வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விசேட அடையாள அட்டையின் மூலம் விசேட தேவையுடையவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் சிரமமின்றி வாக்களிக்க முடியும் என சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இலங்கையில் 1.6 மில்லியன் விசேட தேவையுடையவர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், இந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், விசேட தேவையுடையவர்களுக்கு அதிக பட்ச வசதிகளை வழங்கும் வகையில் விசேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் முன்னோடித் திட்டமாக 5 ஆயிரம் அடையாள அட்டைகள் இந்த வருடத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக 10 மாவட்டங்களில் உள்ள விசேட தேவையுடையவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button