மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வெளியான தகவல்

மருத்துவர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் வெளியான தகவல் | Doctors Going Aborad

இலங்கையில் மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி உயர்கல்வி மற்றும் வேறும் காரணங்களுக்காக இலங்கை மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயரும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கற்கை நெறிகளுக்காக அல்லது வேறு தேவைகளுக்காக செல்லும் மருத்துவர்கள் நாடு திரும்பாதிருக்கும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்ற மருத்துவர்கள் பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கு மருத்துவர்கள் செல்வதனை மேலும் குறைத்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினாலும் வரி அறவீட்டு கொள்கைகளினாலும் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் நாட்டை வெளியேறி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button