அடுத்த ஆட்டத்திற்க்கு ஆக்ரோஷமாக தயாராகும் ரொனால்டோ!

பிரபல நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக பயிற்சி செய்யும் புகைப்படங்களை அல்-நஸர் அணி தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி நடந்த அல்-வெஹ்டா அணிக்கு எதிரான போட்டியில் அல்-நஸர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 4 கோல்களையும் ரொனால்டோவே அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் அல் நஸரின் புள்ளிகள் 37 ஆக உயர்ந்தது. எனினும் அல் நஸர் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் 5வது இடத்தில் இருக்கும் அல்-டாவ்வுன் அணியை அல்-நஸர் எதிர்கொள்கிறது.

இதற்காக அந்த அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரொனால்டோ ஆக்ரோஷமாக பயிற்சி மேற்கொண்டார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button