எதிர்வரும் காலங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை – மஹிந்த அமரவீர

எதிர்வரும் காலங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை - மஹிந்த அமரவீர | No Shortage Of Rice In The Future Sri Lanaka

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான பயிர் நிலங்களில் விளைந்த சிறுபோக பயிர்களை அறுவடை செய்யும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

“சிறுபோகத்தில், 5 இலட்சத்து மூவாயிரம் ஹெக்டெயாரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. எனவே, ஒரு இலட்சம் ஏக்கர் பயிர்ச்சேதம் ஏற்பட்டாலும், எந்தவொரு அரிசி தட்டுப்பாடும் ஏற்படாது.

கடந்த பெரும்போகத்தில் பாரியளவாக நெல் அறுவடை செய்யப்பட்டதால் அடுத்துவரும் பெரும்போகம் மற்றும் சிறுபோகங்களுக்கு தேவையான நெல் எம்மிடம் உள்ளது“ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button