கட்டணம் செலுத்தாத 95,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கட்டணம் செலுத்தாத 95,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு | Water 95000 People Cut Off For Non Payment Of Fees

நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு முக்கிய அறிவித்தலொன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி அக்டோபர் 31ஆம் திகதியுடன் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 95,241 ஆகும்.

மேலும் 12.97 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button