தாதியர் பயிற்சிக்கு 3,500 மாணவர்களை ஏற்றுக்கொள்ள தீர்மானம்

தாதியர் பயிற்சிக்கு 3,500 மாணவர்களை ஏற்றுக்கொள்ள தீர்மானம் | Sri Lanka Nursing Training Application

2023 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்கு 3,500 மாணவர்களை ஏற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.

க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் இயற்பியல் பிரிவுகளில் சித்தி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ம் திகதி முதல் செப்டம்பர் 18ம் திகதி வரை இணையவழி மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான தகவல்களை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வெளியிடப்படவுள்ள அரச வர்த்தமானி மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk இருந்கு பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button