மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு : அரசியல் பயணத்தின் புது ஆரம்பம்! | Slpp Presidential Candidate Announcement Sri Lanka

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும் சிறிலங்காவின் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் போது, கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தோற்றம் பெற்ற தமது கட்சி, கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்நோக்கியிருந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், எதிர்வரும் 5 ஆண்டுகளில் சிறிலங்கா பொதுஜன பெரமுன மேலும் வலுப்பெறுமெனவும் கட்சிக்கு மேலும் பல புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை முன்னெடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button