பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது  தொடர்பில் தகவல் தெரிந்தால் இலங்கை பொலிஸின் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ சில இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை அல்லது  ஏதேனும் ஒரு வகையில் பிரித்து மறைக்கப்பட்டுள்ளமை அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு சிதைவடைய இடமளிக்கப்பட்டுள்ளமை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொலைப்பேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதாகவும், தகவல் கொடுப்பவர்களின் அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆனால், உண்மைத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும், தவறான தகவல்களைத் தருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button