தபால் மூல வாக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் சற்றுமுன்னர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button