உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு விசாரணை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஓய்வுபெற்ற கேர்னல் டப்ளிவ்.எம்.ஆர்.விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.

தேர்தலைப் பிற்போடும் நீதிப்பேராணையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button