நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு! மகிந்த சீற்றம்!

பிரதமர் பதவியை மீளப் பொறுப்பேற்கவுள்ளேன் என்று வெளிவரும் செய்தி தொடர்பில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமராக மகிந்தவை மீளவும் நியமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுஜன பெரமுனவினர் வெளியிடும் கருத்துக்கு மகிந்த ராஜபக்ச இந்த விடயத்தினை்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் மே 9 ஆம் திகதி நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டே பிரதமர் பதவியிலிருந்து விலகினேன். அந்தக் கசப்பான சம்பவத்தை மீள நினைவுபடுத்த நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button