ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நாளை

ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல உலமா சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இஸ்லாமிய நாட்காட்டியின் புனித மாதமான ரமழான் என்பது நம்பிக்கை, பிரார்த்தனை, நோன்பு, பிரதிபலிப்பு மற்றும் சமூகத்தின் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

உலக இஸ்லாமிய மக்கள் இந்த மாதத்தில் நோன்பு வைப்பது வழக்கமான ஒன்றாகும்.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமழான், இந்த ஆண்டு மார்ச் 22 அன்று தொடங்கி ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button