நூறு கிலோவிற்கு அதிகமான கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைநகரில் 125 கிலோ கஞ்சா மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button