அரிசியை இறக்குமதி செய்ய நேரிடலாம்!

அரிசியை இறக்குமதி செய்ய நேரிடலாம் | Selling Rice At Higher Prices

அரிசியின் விலையை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாமல்  போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படும்.

விலைக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் விற்பனை செய்கின்றனர்.

இதை நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று நிச்சயமாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வோம்.

தொடர்ந்தும் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button