வன்னியில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வேட்பு மனுத்தாக்கல்

Gallery

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் றிசாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் சக்தியின் தாெலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இதன்பாேது ரசிகா பிரியதர்சினி, நிராேஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நுனைஸ் பாரூக் உள்ளிட்ட வேட்பாளர்களும் வருகை தந்திருந்தனர்.

மேலும்,  கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் வருகை இதன்போது தந்திருந்தனர்.

GalleryGalleryGallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button