வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளத்தினூடாக உக்குளாங்குளம் செல்லும் வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதனால் அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
மழை காலங்களில் இவ் வீதியால் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் இவ்வீதியை பயன்படுத்தும் வயோதிபர்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் பாடசாலை மாணவர்கள் வாகன ஓட்டுனர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாகியும் இவ்வீதி புனரமைப்பு செய்யப்படாமையினால் அங்கு வாழும் மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுப்பதாகவும் இவ்வீதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அங்கு வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button