புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெளியிடும் காலம் தொடர்பான அறிவிப்பை பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றது.

இந்தப்பரீட்சைக்கு 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகி நண்பகல் 12.15 மணிக்கு நிறைவடைந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button