வவுனியாவில் தரம் 5 பாடசாலை மாணவி மீது ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல்.!

வவுனியாவில் தரம் 5 பாடசாலை மாணவியை முரட்டுத்தனமான முறையில் ஆசிரியர் ஒருவர் அடித்ததில் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!

வவுனியா பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவியை திலீபன் எனும் ஆசிரியர் முரட்டுத்தனமான முறையில் அடித்ததினால் குறித்த மாணவி சுயநினைவை இழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது இன்று காலை வவுனியா நகர மத்தியிலுள்ள தேசிய பாடசாலையான முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் தரம் 5 மாணவர்களுக்காக வகுப்பொன்றை நடத்துவதற்காக அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைத்துள்ளார்.

இதன் போது தெரியவருவதாவது, குறித்த மாணவி பரீட்சை வினாத்தாள் ஒன்றினை கொண்டு வர மறந்தமையினால் அம் மாணவியை உள ரீதியாக பாதிப்படையக்கூடிய வகையில் திட்டியதுடன் முரட்டுத்தனமாக கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியுள்ளார். இதனால் அம் மாணவி சுய நினைவை இழந்து மயக்கமுற்று சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாரான செயலை வன்மையாக கண்டித்து அந்த ஆசிரியருக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button