சிற்றுண்டிகளின் விலை அதிகரிக்கப்பு தொடர்பில் இறுதி தீர்மானம்..!

சிற்றுண்டிகளின் விலைகளிலும் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையளார்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி, சிற்றுண்டிகளின் விலைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் இன்றைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமது உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க நேரிடும் என்று அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனம் அதிகரித்துள்ளது.

அத்துடன், தமது நிறுவன எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படும் என லாப் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button