பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கும் பரிசு!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றுவதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதுடன், இதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிவு வழங்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அத்தகைய தகவல்களை வழங்கும் நபர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு, மேலுள்ளவாறு ரொக்கப்பரிவு வழங்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button