திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு

திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு | Sla And Ceb Will Be Allocated Billion Treasury

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியில் இருந்து 238.9 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிதியிலிருந்து இலங்கை மின்சார சபைக்கு 129 பில்லியனும் தேசிய விமான சேவைக்கு 109.9 பில்லியன், ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

குறித்த இரு நிறுவனங்களும் தமது கடன்களை தீர்த்து, மறுசீரமைப்பு திட்டத்துக்கு தயாராகும் வகையிலேயே இந்த நிதிஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர், ஹர்ஷ டி சில்வா தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) இந்த கூடுதல் மதிப்பீட்டை அண்மையில் அங்கீகரித்துள்ளது.

மேலும், நிதி அமைச்சு இந்த கூடுதல் நிதி மதிப்பீட்டை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button