இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஒருவரின் அதிரடி முடிவு

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஒருவரின் அதிரடி முடிவு | Citizenship Another Country Play Cricket Sl Player

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது கிரிக்கெட் எதிர்காலத்திற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் லீக் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்று தொழில்ரீதியாக மீண்டும் அவர் விளையாட ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ள நிலையில், அந்த சபையின் அடுத்த செயற்குழு கூட்டத்தின் பின்னர் இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

மேலும், ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button