அடுத்த உலக கிண்ணத்தை வெல்லப்போகும் இலங்கை அணி !
எதிர்வரும் உலகக் கிண்ணத்தை தற்போதைய இலங்கை கிரிக்கெட் இளையோர் அணி நிச்சயமாக வெல்லும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தை பெற்றுத் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் இவ்வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 12ஆவது இடத்தில் இலங்கை அணி இருந்ததாகவும், ஆனால் அந்தப் போட்டியின் பின்னர் அது 09ஆவது இடத்திற்கு முன்னேறியதாகவும், அந்த வெற்றி மனப்பான்மையுடன் இலங்கை அணி உலகக் கிண்ண போட்டியில் நுழைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.