இந்தியாவுக்கு எதிரான ரி20 தொடர்: இலங்கை அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்

இந்தியாவுக்கு எதிரான ரி20 தொடர்: இலங்கை அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர் | Sri Lankan Player Withdrawn From Indian T20 Series

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு (India) எதிரான ரி20 தொடரில் இருந்து இலங்கை (Sri Lanka) அணி வீரர் நுவான் துஷார (Nuwan Thushara) விலகியுள்ளார்.

பல்லேகலையில் நேற்று (24) இடம்பெற்ற களத்தடுப்பு பயிற்சியின் போது அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவும் (Dushmantha Chameera) காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடர் ஜூலை 27, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

அதன் படி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button