நாளைய போராட்டம் – பாடசாலை கல்வி நடவடிக்கைள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 

நாளைய போராட்டம் - பாடசாலை கல்வி நடவடிக்கைள் தொடர்பில் வெளியான அறிவிப்பு! | Tomorrow Protest Against Sri Lanka Governmentரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளையதினம் பல தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்து அல்லது கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதேவேளை, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி வழமை போல இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button