இலங்கையில் பயணிகள் பேருந்துகள் தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள தடை

இலங்கையில் பேருந்துகளில் பார்வையைத் தடுக்கும் வகையில் சிலைகள், மாலைகள், உருவங்கள், மின்விளக்குகள், தொங்கும் ஆடும் பொருட்களை பொருத்த தடை விதிக்க மோட்டார் போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்துள்ளது.

சாரதியின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பேருந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்படுவதை தடை செய்யவும் குறித்த துறை பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி ரதல்ல பேருந்து விபத்து தொடர்பான விசாரணையின் பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலா சென்ற பேருந்து ரதல்ல – சோமர்செட் குறுந்தொகை வீதியில் வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதி கீழே இழுத்துச் செல்லப்பட்ட விபத்து தொடர்பான விசாரணையின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இந்த 16 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்கவின் பணிப்புரையின் பேரில் குருநாகல் பிரதான மோட்டார் வாகனப் பரிசோதகர் ஆர்.எம்.ஏ.பி.கே.எம்.ராஜதேவ தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஆய்வுக் குழு இந்தச் சோதனையை மேற்கொண்டது.

ஆய்வுச் சபையின் அறிக்கை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் பிரதான மோட்டார் வாகனப் பரிசோதகர் ஆர்.எம்.ஏ.பி.கே.எம்.ராஜதேவவினால் கையளிக்கப்பட்டது. இந்த விபத்துக்கு பேருந்தே முழுமையான காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக் செயலிழக்கும் வகையில் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த அலங்காரங்கள் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அத்துடன் நுவரெலியாவில் இருந்து விபத்து இடம்பெற்ற இடம் வரையிலான 09 கிலோமீற்றர் தூரத்தில் பஸ் அதிக பிரேக்கிங்குடன் இயங்கியுள்ளதாகவும் இதன் காரணமாக பிரேக்கிங் செயலிழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button