பல்கலைக்கழக அனுமதி : மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி https://www.ugc.ac.lk/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பங்களை 2025 மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button