அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஓய்வு பெறும் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது வெளிநாட்டுத் தூதுவர் பதவியைப் பெறுவதற்காகவோ அரச அதிகாரிகள் வாக்களிக்கும் உரிமையை மீறக் கூடாது, அவ்வாறு செய்தால் அரசியலமைப்பின் படி அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இறுதி முயற்சி தேர்தலை சீர்குலைப்பதே எனவும் தபால் மூல வாக்களிப்பை பிற்போடுவதற்கான சிறந்த உதாரணத்தை அவர் காட்டியுள்ளார் எனவும் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, வாக்களிப்பதற்காக நெடுஞ்சாலையில் நின்று போராடவும் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

“வாக்கெடுப்பை ஒத்திவைப்பதற்கான அரசியலமைப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்த பின்னர், அதிபர் இப்போது வாக்கெடுப்பை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுகின்றனர்.

பணம் தராவிட்டால் வாக்குச் சீட்டு அச்சடிக்க முடியாது என அரசு அச்சக அலுவலர் அறிவித்துள்ளார். அதேபோல், நிதித்துறை செயலாளரும் பணம் தர முடியாது என்கிறார். இவை இரண்டும் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் நடக்கின்றன.

அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் வெகுஜன மக்களிடமிருந்து சம்பளம் பெறும் ஒரு பொறுப்புக் குழு. அண்மையில், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வேண்டுமென்றே தேர்தலை ஒத்திவைக்கும் இந்த முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது அரசு அதிகாரிகளின் கடுமையான தவறு. அரசியலமைப்பின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றம்.

வெளிநாட்டுத் தூதுவர் பதவிக்காகவோ அல்லது ஓய்வு காலத்தை நீடிப்பதற்காகவோ இத்தகைய ஜனநாயக உரிமைகள் மீறப்படக் கூடாது. அதேபோன்று ஜனநாயகத்தை சீர்குலைத்து இந்த தேர்தலை ஒத்திவைக்கும் ரணிலின் முயற்சியை முறியடிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button