மறு அறிவிப்பு வரை பயணிக்க வேண்டாம்..! வெளியான எச்சரிக்கை
மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து (mannar) காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்றொழில் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவித்துள்ளது.
மேலும் நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.