இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்! | Weather Update Sri Lanka Meteorology Department

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கில் இருந்து தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன், காற்றானது மணித்தியாலத்துக்கு 20 தொடக்கம் 30 வரையான கிலோ மீற்றர் வரையில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புக்களின் அலையானது மிதமாக காணப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button