அஸ்வெசும கொடுப்பனவு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Aswesuma Allowance For 4 Lakh Families From July

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 420,000 குடும்பங்களின் அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 1.38 மில்லியன் ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button