இலங்கை வாழ் பெற்றோர்களுக்கு வைத்தியர் விசேட எச்சரிக்கை
நாடாளவிய ரீதியில் வைரஸ் தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், பெற்றோருக்கு பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வைரஸ் காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று விளையாட்டுகளில் ஈடுபட்டால் அவர்களின் இதயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறான பிள்ளைகள் முடிந்தவரை வீட்டிலேயே வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சமகாலத்தில் சிறுவர்களிடையே இன்ப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளன.
இதுபோன்ற நிலையில் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கண்டறியப்பட்டுள்ளது.
தங்கள் பிள்ளைகளுக்கு வைரஸ் காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருந்தால், அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்.
நோய்வாய்ப்பட்டவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போது, அது மற்ற மாணவர்களையும் பாதிக்கும். அதன் பிறகு, பாடசாலை முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வைரஸ் பரவக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.