சீனாவின் தென்பகுதி நகரில் கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சீனாவின் தென்பகுதி நகரமான குவாங்சோவில் கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிராக மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கண்ணாடிப்போத்தல்களையும் கற்களையும்எறிவதையும் கலகமடக்கும் பொலிஸார் அதிலிருந்து தப்ப முயல்வதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் இழுத்துசெல்லப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

ஹைசுமாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரவு முதல் புதன்கிழமை வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹைஜூவில் உள்ள ஹ_ஜியாவோ கிராமத்தில் 100க்கும் மேல் பொலிஸாரை பார்த்ததாகவும் மூவர் கைதுசெய்யப்படுவதையும் பார்த்ததாகவும் குவாங்சூ  கிராமத்தை சேர்ந்த  நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத ஆரம்பத்திலும் இந்த நகரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button