திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு
பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு 5 வருட தற்காலிக வதிவிட விசாக்களை (TRV) வழங்குவதை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, பிலிப்பைன்ஸில் வசிக்கும் இலங்கை சமூகத்தின் மிகவும் அழுத்தமான கவலைகளில் ஒன்றை நிவர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, வதிவிட விசாக்கள் 02 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டன, அதனால் அடிக்கடி புதுப்பித்தல்கள் தேவைப்பட்டன.
அதன்காரணமாக வணிகம் மற்றும் பிற அவசர விஷயங்களுக்காக பயணிக்க வேண்டிய நபர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமங்களை ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், பல ஆண்டுகளாக, இலங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வதிவிட விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.
இதன்படி, அவர்களின் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தூதவர் சானக தல்பஹேவா, பதவியேற்றதும், தனது பதவிக் காலத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டை சமூகத்திற்கு உறுதியளித்தார்.
தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வதிவிட விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டித்தது, பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.