துவிச்சக்கர வண்டிகளில் பணிக்குச் செல்வோம்! மகிந்த அமரவீரவின் ஆலோசனை

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

துவிச்சக்கர வண்டிகள் பயணிப்பதற்காக ஒவ்வொரு வீதியிலும் ஒரு தனியான பாதை ஒதுக்குவதுடன், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களில் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களுக்கு சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறைத் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் உள்ள போது பயணிக்கும் ஒரு வாகனத்தில் கிலோமீட்டருக்கு 103.56 ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளது.

துவிச்சக்கர வண்டி பாவனையினால் காற்று மாசுபாட்டை குறைத்தல், நேர விரயத்தை தடுக்க முடியும். மேலும் வாய்ப்புகள் காரணமாக சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு கிலோ மீற்றருக்கு 236.48 ரூபாவை மீதப்படுத்த முடியும் என்பதுடன் அரசாங்கத்திற்கு 339.98 ரூபா இலாபம் கிடைக்கப்பெறும்

எனவே, இத்திட்டத்தை ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடவுள்ளோம்.

அடுத்த வருடத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமாயின் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்க அரச தலைவர் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button